11.11.2008

உயிரிலும் நீயே என் காதலியே



என் இதய நான்கு அறைகளிலும்
அழகி உன் புகைப்படம்தான்
சுழலும் சுவாசம் கூட ஒருமுறை
உன்னழகை பார்க்க வேண்டும் என்றுதான்

சுவாசிக்கும் காற்றிடம்
வரம் வேண்டுகிறேன்
உன் சுவாசத்தில் செல்லவும்
என்னைப் பற்றிச் சொல்லவும்

ம்ம்ம்.................

இன்றும் நீ என்
விழிகளில் விழவில்லை
என்றும் என் விழிகள்
உனக்காக காத்திருந்ததில்லை .

காரணம்.

என் உயிர் காக்கும் இதயமும்
சுழல்கின்ற சுவாசமும்
என்றும் உன்னையே சுற்றுவதால்.....

11.09.2008

நினைவுகள் அழிவதில்லை



நினைவுகள் அழிவதில்லை
கனவுகள் மறைவதில்லை

காலங்கள் திரும்புவதில்லை
கன்னி உந்தன் மனமும் கரையவில்லை

இனி..........

கல்லறையில்−என்
கண்கள் மூடப்போவதில்லை


கண்ணீர்



ஆகாயக் கண்ணீர்
பாரிற்கு மழையானது.......

பாரின் கண்ணீர்
புற்களுக்கு பனியானது.......

எனது கண்ணீர்
உனக்கான கவி ஆனது........

உனக்காக கவி ஆன எனது கண்ணீர்
இன்று காவியம் வடிக்கின்றது.

உனக்காக உயிர்



உனக்காக உயிர் வாழ்கிறேன்
விடும் முச்சும் உனக்காக...........

ஏனேனில் என்னுள் மட்டும்
நீ வாழ்வதால்.....

இல்லையெனில் என் வாழ்க்கை
எதற்காக
..........

உனக்காக உயிர் வாழ்ந்த போது
காதல் என்னைக் காதலிக்கவில்லை!

எனக்காக வாழ முற்படுகையில் மட்டும்
காதல் என்னைக் கைது செய்கிறதே?

போலிகள்


நீ வேண்டுமானால் போலியாக
கோபிக்கலாம்...........

ஆனால் எனக்கு போலியாக
வருத்தப்படத் தெரியாது.............

உனது போலிக் கோபம் கூட
வலிக்கத்தான் செய்கிறது..........

போலி உலகில் உன் காதலும் போலியா!!
கொடுமையிலும் கொடுமைதான்!!!...........

இயக்கமில்லாத இயக்குனர்



சோகத்திலும் சுகம் உன்டென்று
சொல்லித் தந்தவள் நீ...........
கற்பனை சிறகுகள் விரித்து ஆகயத்தில்
பறக்க கற்றுத்தந்தவள் நீ...........

இசையின் இனிமையை ரசிக்க
சொன்னவள் நீ........
கண்களிணால் கதைக்க
பழக்கியவள் நீ.............

நீ இல்லாமல் இவையனைத்தும்
இயக்கமுடியாத இயக்குனர் நான்................