12.29.2008

பிரிகின்ற ஆண்டு




எட்டாத விடயத்தை என்னால்
எட்டமுடிந்த காலமிது
கண்ணில் என்னவள் பட்டதும்
காதலெனைத் தொட்டதும் இங்கேதான்

காதலி வரவால் நெஞ்சம் பூவானது
அவள் பிரிவால் அதுவே புண்ணாணது
புண்ணாண மனதை பொன்னாக்க முயன்றேன்
அவை மீண்டும் மீண்டும் அவளுக்காய் மண்ணாகிறது

வரும்காலம் எப்படியெனத் தெரியாது
நம் வருங்காலமும் எப்பட்யெனத் தெரியாது
ஓயாத அலைகளாய் உன் நினைவுடன்
2008ற்கு விடைகொடுக்க காத்திருக்கிறேன்
ஆண்டிற்கு மட்டுமே என் விடை
என்னையாண்ட உனக்கல்ல!!!

12.18.2008

காத்திருக்கிறேன்





உன் மதம் எனக்கு வேண்டாம்
சம்மதம் மட்டுமே போதும்.

உன் சாதியும் தேவையில்லை
உன்னில் பாதி கொடு..

உன்ணப்பன் பணம் பெரிதல்ல
உன் குணம் இருக்கையில்.

சொத்துக்களும் தேவையில்லை
நீ எனக்கு செந்தமானால்.

செத்துப்போகவும் தோன்றாது
உன்னுடன் சோ்ந்து வாழ்கையில்.

சேர நினைக்கிறேன்.
என்னை சோ்த்துக்கொள்வாயா!

உன்னுள் வரத்துடிக்கிறேன்
என்னை வாரிக்கொள்வாயா!

உலகையே மறக்க நினைக்கிறேன்
உன்னுடன் சோ்கையில்.....

என்னை ஆமோதிப்பாயா - இல்லை
அவமதிப்பாயா காதலியே........!
காத்திருக்கிறேன் உன் வார்த்தைக்காக..
என் வாழ்க்கையை உன்னிடத்தில் தொலைக்க...!

மௌனங்கள்



சில வேளைகளில் என் மௌனமே
உனக்கு விடையாகிறது.....
பலவேளைகளில் உன் மௌனமோ
எனக்குப் புதிர் போடுகிறது

12.02.2008

ஏமார்ந்து விட்டேன்



முதல் முறை பார்த்த போதே
முடிவு செய்து விட்டேன்
நீதான் என் வாழ்க்கை என்று
முடிந்து போன உன்
வாழ்க்கையைக் காட்டி......
முடித்து வைக்க போகிறாய்
என்று தெரியாமலே......