3.15.2009

வீட்டினுள்ளே!





நெஞ்சில் கனக்கும் அந்தச் சொற்களும்
என்னிடம் கனைக்கும் அந்த சொந்தம்
இவைகளாலே வீட்டினுள்ளே
காணாமற்போய்விட்டேன்

*****************************************

என் முன் சிரிக்கும் அதே வேளை
என் முதுகிலும் குத்தும் சொந்தங்கள்.
சுகம் கேட்டதில்லை என்னிடம்
தங்கள் சுமையைத்தான் கூறுவர்.

*****************************************

அமைதியில் நானிருந்தால் காதல் என்பர்
அதுவே ஆரவாரப்பட்டால்
யாரையோ பார்த்துவிட்டான் என்பர்.

*****************************************

தனிமையில் நானிருக்க தாய் என்று
ஆறுதல் யாருமில்லை.
தனாக வந்துசெல்லும் உறவுகளும்
கடைசியில் நான் யார் என்பர்

*****************************************

3.09.2009

முத்தம்



சத்தமே இல்லாத இந்த சாந்த வேளையில்
யுத்தமே வேண்டாம் நமக்குள்.
மொத்தமாய் உன் காதலை - எனக்கு
முத்தமாய்க் கொடுத்திடு.
சந்தமில்லாமல் வாங்கிக் கொள்வேன்.
உன் முத்தத்துடன் காதலை

இரவில் தனிமை



தனிமையில் வாழும் நேரங்களில்
அந்த நிலவுதான் என்னுடன் - துணை
உன்னைப்போல் என்னருகில்
உன் நினைவைத் தந்தவண்ணம்