12.29.2008

பிரிகின்ற ஆண்டு




எட்டாத விடயத்தை என்னால்
எட்டமுடிந்த காலமிது
கண்ணில் என்னவள் பட்டதும்
காதலெனைத் தொட்டதும் இங்கேதான்

காதலி வரவால் நெஞ்சம் பூவானது
அவள் பிரிவால் அதுவே புண்ணாணது
புண்ணாண மனதை பொன்னாக்க முயன்றேன்
அவை மீண்டும் மீண்டும் அவளுக்காய் மண்ணாகிறது

வரும்காலம் எப்படியெனத் தெரியாது
நம் வருங்காலமும் எப்பட்யெனத் தெரியாது
ஓயாத அலைகளாய் உன் நினைவுடன்
2008ற்கு விடைகொடுக்க காத்திருக்கிறேன்
ஆண்டிற்கு மட்டுமே என் விடை
என்னையாண்ட உனக்கல்ல!!!

கருத்துகள் இல்லை: