3.15.2009

வீட்டினுள்ளே!





நெஞ்சில் கனக்கும் அந்தச் சொற்களும்
என்னிடம் கனைக்கும் அந்த சொந்தம்
இவைகளாலே வீட்டினுள்ளே
காணாமற்போய்விட்டேன்

*****************************************

என் முன் சிரிக்கும் அதே வேளை
என் முதுகிலும் குத்தும் சொந்தங்கள்.
சுகம் கேட்டதில்லை என்னிடம்
தங்கள் சுமையைத்தான் கூறுவர்.

*****************************************

அமைதியில் நானிருந்தால் காதல் என்பர்
அதுவே ஆரவாரப்பட்டால்
யாரையோ பார்த்துவிட்டான் என்பர்.

*****************************************

தனிமையில் நானிருக்க தாய் என்று
ஆறுதல் யாருமில்லை.
தனாக வந்துசெல்லும் உறவுகளும்
கடைசியில் நான் யார் என்பர்

*****************************************

கருத்துகள் இல்லை: